மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு 'அவசரம்'! - sonakar.com

Post Top Ad

Friday 11 December 2020

மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு 'அவசரம்'!

 



மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடாத்தி முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆராயமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


பழைய முறைமையிலாவது தேர்தலை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எதிர்காலத்தில் புதிய முறைமை குறித்து ஆராயலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கொரோனா சூழ்நிலையில் ஜனாஸா எரிப்பு, பொருளாதா வீழ்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களினால் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தி உருவாகியுள்ள நிலையில் தேர்தலை அவசரமாக நடாத்தி முடிப்பது குறித்து ஆராய அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment