அடக்கம் செய்ய அனுமதித்தால் அரசு கவிழும்: தேரர் - sonakar.com

Post Top Ad

Tuesday 17 November 2020

அடக்கம் செய்ய அனுமதித்தால் அரசு கவிழும்: தேரர்



கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 'அரசியல்' ரீதியிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அது அரசாங்கத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாக அமையும் என்கிறார் மெதகொட அபயதிஸ்ஸ ஹிமி.


நிபுணர்களின் முடிவை அரசியல் தேவைகளுக்காக மாற்றுவது ஏற்புடையதன்று எனவும் அவ்வாறு அரசாங்கம் செய்தால் அதன் விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவிக்கிறார்.


ஏலவெ, ஞானசார, ஆனந்த தேரர் உட்பட்டவர்கள் மக்கள் போராட்டங்களைத் தூண்டி விடப் போகும் தொனியில் கருத்துரைத்துள்ள அதேவேளை, தலைமன்னார் பகுதியில் உள்ள வரண்ட நிலைப் பகுதியில் ஜனாஸாக்களை அடக்க அனுமதிப்பது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment