மேலும் ஒரு ஜனாஸா 'பொசிடிவ்' என அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday 7 November 2020

மேலும் ஒரு ஜனாஸா 'பொசிடிவ்' என அறிவிப்பு!

 



நேற்றைய தினம் கொழும்பு, செட்டித்தெருவில் வபாத்தான நபருக்கு நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சோனகர்.கொம்முக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.


நேற்று முன் தினம் வபாத்தான, கொழும்பு 15ஐச் சேர்ந்த 23 வயது நபரின் ஜனாஸா நேற்றைய தினம் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் பத்துக்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் சூழ்நிலையுள்ளது.


இதேவேளை, நேற்றும் அதற்று முன் தினமும் சிலரின் பரிசோதனைகள் நிறைவுற்று, கொரோனா தொற்றில்லாத காரணத்தால் குடும்பங்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

1 comment:

Mohammad Akram said...

innalillahiwainnailaihirojiun

Post a Comment