ரிசாத் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 13 November 2020

ரிசாத் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு!

 




நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் விளக்கமறியலை எதிர்வரும் 25ம் திகதி வரை நீடித்துள்ளது நீதிமன்றம்.


அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரிசாத், ஆறு தினங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


2019 ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளம் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தனது மாவட்ட வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து ஏற்பாடு செய்ததன் பின்னணியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு, அதனூடாக 9.5 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டுள்ளமையும் அதனை ரிசாத் தரப்பு மறுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment