அரசோடான கூட்டணியில் 'திருப்தி' இல்லை: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Thursday 1 October 2020

அரசோடான கூட்டணியில் 'திருப்தி' இல்லை: தயாசிறி

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளுந்தரப்புடன் வைத்திருக்கும் கூட்டணி திருப்திகரமாக இல்லையென தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.


சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்குத் தேவையான 'கௌரவம்' கிடைக்கப் பெறவில்லையெனவும் இதனால் உறுப்பினர்கள் மத்தியில் பாரிய அதிருப்தி நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


போதிய பதவிகள் இல்லாத நிலையில் மக்களுக்கு சேவை செய்ய முடியாதிருப்பதாகவும் தயாசிறி விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment