24 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Friday 30 October 2020

24 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள்!

 


கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


ஒக்டோபர் 4ம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாவது அலையின் பின்னணியில் நாட்டின் பல பிரதசங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம் 5630 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, தொடர்ந்தும் சமூக மட்டத்திலான கொரோனா தொற்று இல்லையென்று அரசு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment