நான் அப்படியெதுவும் சொல்லவில்லை: மைத்ரி மறுப்பு - sonakar.com

Post Top Ad

Monday 21 September 2020

நான் அப்படியெதுவும் சொல்லவில்லை: மைத்ரி மறுப்பு



பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகினால் அவருக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் தருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்தை மறுத்துள்ளார் மைத்ரி.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது இவ்வாறு தெரிவித்திருந்தமை முற்றிலும் சோடிக்கப்பட்ட போலித் தகவல் என மைத்ரியின் செயலாளர் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, தான் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்றால் இதற்கு விளக்கமளிக்கப் போவதாகவும் மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment