ஷானிக்கு உதவி செய்ததாக சப் இன்ஸ்பெக்டர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday 4 August 2020

ஷானிக்கு உதவி செய்ததாக சப் இன்ஸ்பெக்டர் கைது


வாஸ் குணவர்தனவின் ஆயுத விவகார வழக்கின் சாட்சியங்களை திரிபுபடுத்திய குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு இவ்விவகாரத்தில் உதவியதாக கூறப்படும் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment