வென்றாலும் தோற்றாலும் UNPக்கு ஆட்சியில் 'பங்கு' : வஜிர - sonakar.com

Post Top Ad

Sunday 5 July 2020

வென்றாலும் தோற்றாலும் UNPக்கு ஆட்சியில் 'பங்கு' : வஜிர


பொதுத் தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் பங்கேற்கும் என தெரிவிக்கிறார் ஐ.தே.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன.

அரசியலமைப்பில் இருக்கும் 'தேசிய' அரசு என்ற வழிமுறையூடாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் பங்காளர்களாக இருக்கும் என விளக்கமளித்துள்ள அவர், கடந்த முறையும் இவ்வாறே ஐ.தே.க ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது என தெரிவிக்கிறார்.

இதேவேளை, எந்த அரசு அமைந்தாலும் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் ஆறு மாதங்கள் தாக்குப் பிடிப்பது கடினம் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment