லொக்டவுன் அவசியமில்லை; நிலைமை கட்டுப்பாட்டில்: இ.தளபதி - sonakar.com

Post Top Ad

Monday 13 July 2020

லொக்டவுன் அவசியமில்லை; நிலைமை கட்டுப்பாட்டில்: இ.தளபதி


கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் கண்டறியப்பட்டு விட்டதாகவும் நிலைமை முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.

கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ள 24 மணி நேரமும் நாடு தயாராக இருப்பதாகவும் தற்சமயம் மீண்டும் லொக்டவுன் எதுவும் அவசியமில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment