நாவலபிட்டி நகர சபை தலைவரும் சூதாடிய குழுவும் கைது! - sonakar.com

Post Top Ad

Friday 1 May 2020

நாவலபிட்டி நகர சபை தலைவரும் சூதாடிய குழுவும் கைது!


கொரோனா தனிமைப்படுத்தல் விதிகளை மீறி அம்பகமுவ பகுதி ஹோட்டல் ஒன்றில் மது மற்றும் சூதாட்டத்தில் திளைத்திருந்த நாவலபிட்டி நகர சபை தலைவர் சசங்க சஞ்சீவ சம்பத் உட்பட ஏழு பேரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கினிகத்தேன பொலிசாரால் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த நபர்ககள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இதில் குறித்த சுற்றுலா ஹோட்டலின் காவல் உத்தியோத்தரும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தப்பியோடிய இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment