ராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா: 29 பேர் முகாமுக்கு - sonakar.com

Post Top Ad

Tuesday 5 May 2020

ராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா: 29 பேர் முகாமுக்கு


ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பகுதியில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் அப்பகுதியைச் சேர்ந்த 29 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 15ல் இருந்தும் சிலரை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று 9வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளமையும் விரைவில் நாடு வழமை நிலைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசு முனைப்பாக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment