கொரோனாவைக் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கையால் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பிருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் நபர்களின் சமய உரிமைகள் தொடர்பில் நாட்டில் பாரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற் கட்சித் தலைவர்கள் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசின் நடவடிக்கைகளால் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் அதிருப்தியடையக்கூடிய வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment