நேற்றைய தொற்றாளர்களுள் ஒருவரே பொது மகன்: இ.தளபதி - sonakar.com

Post Top Ad

Thursday 30 April 2020

நேற்றைய தொற்றாளர்களுள் ஒருவரே பொது மகன்: இ.தளபதி


நெற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் ஒருவரே குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த பொது மகன் எனவும் ஏனையோர் கடற்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் நேற்றைய தினம் 22 கடற்படை சிப்பாய்களும் அவர்களின் உறவினர்களுமே தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அதில் ஒருவர் இராணுவத்தில் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 20 பேர் வெலிசர முகாமைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவர் விடுமுறையில் சென்றிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment