ஊரடங்கு தளர்வுக்கான அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளதாக அறியமுடிகிறது.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலுக்கான மாற்றுத் தேதியொன்று அறிவிக்கப்பட்டாக வேண்டும் என ஆளுங்கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில் நாளைய கூட்டம் இடம்பெறவுள்ளது.
நாளைய கூட்டத்துக்கு இராணுவ தளபதி, சுகாதார பணிப்பாளர், தபாலதிபர் உட்பட்ட பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment