இலங்கையில் கொரோனா அபாயம் முன்னர் இருந்த வாரங்களை விட அதிகரித்துள்ள நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 22ம் திகதியுடன் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் குறிப்பிட்ட சில இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கொழும்பில் மேலும் பலர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ள பின்னணியில் ஊரடங்கை 27ம் திகதி வரை தொடர்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment