இன்ஷா அல்லாஹ், இங்கு வாழும் ஏழை மக்களுக்கு உதவ முடிந்தால் உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Friday 24 April 2020

இன்ஷா அல்லாஹ், இங்கு வாழும் ஏழை மக்களுக்கு உதவ முடிந்தால் உதவுங்கள்!

https://www.photojoiner.net/image/CBnmIhef

திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டைக் கிராமத்தில் நிரந்தர வருமானமின்றி தற்போதைய சூழலில் கொடிய வறுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களுக்கு ரமழானுடைய காலத்தில் உதவ விரும்பும் நல்லுள்ளம் படைத்தோரிடமிருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

432 விதவைகள், 1517 நடுத்தர வருமானத்துடன் வாழ்ந்த குடும்பங்களைக் கொண்ட இப்பகுதியில் மக்கள் அன்றாட வாழ்வை பாரிய சிரமங்களுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், ரமழானுடைய காலத்தில் இங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை வழங்க விரும்புவோர், பிரதேசத்தின் மஸ்ஜிதுல் இலாஹியா பள்ளிவாசல் ஊடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு உதவும் படி வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இது பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் +94715511788 அல்லது வட்சப் ஊடாக +94785203544 ஆகிய இலக்கங்கள் ஊடாக சகோதரர் பைசரைத் தொடர்பு கொள்ள முடியும்.

நேரடியாக உதவ விரும்புவோர் கீழ்க்காணும் வங்கிக் கணக்கிலத்துக்கு உங்கள் பங்களிப்பை அனுப்பி வைக்கலாம்:

A/C Name: Masjidul Ilahiya Jumma Mosque
A/C Number: 150200190034361
Bank: People's Bank
Branch: Pulmoddai

No comments:

Post a Comment