தம்மைத் தனிமைப்படுத்தாது நிலாவெளியில் தங்கியிருந்த 8 வெளிநாட்டவர் கண்டறியப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியிருந்த நபர்களே இவ்வாறு நடந்து கொண்டிருப்பதாகவும் இதில் தலையிட்டுள்ள பொலிசார் நிலாவெளியில் அவர்கள் தங்கியிருந்த விடுதி உரிமையாளருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகள் சென்று திரும்பியவர்களையும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment