இது வரை 50 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்! - sonakar.com

Post Top Ad

Friday 10 April 2020

இது வரை 50 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்!


இலங்கையில் 190 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தலை தவிர்த்து வந்தவர்களைத் தொடர்ந்தும் அரசு வலியுறுத்தி வருகின்ற அதேவேளை இதுவரை மூவாயிரத்துக்கம் அதிகமானோர் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து வீடு திரும்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்ந்தும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை புதிதாகவும் முன்னெச்சரிக்கை நிமித்தம் பலர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment