கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு செவ்வாய் கிழமை காலை 6 மணி முதல் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கால நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பின்னணியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment