நீர்கொழும்பு தாக்குதலில் உயிரிழந்த சகோதரர் அப்துல் அசீஸ் - sonakar.com

Post Top Ad

Tuesday 10 March 2020

நீர்கொழும்பு தாக்குதலில் உயிரிழந்த சகோதரர் அப்துல் அசீஸ்


நேற்றைய தினம் நீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் காடையர் குழுவொன்றினால் உருவாக்கப்பட்ட வன்முறைச் சம்பவத்தில் கனேவல்பொலயைச் சேர்ந்த 33 வயது சகோதரர் அப்துல் அசீஸ் அப்துல் கபூர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.



குறித்த சகோதரர் இரு பிள்ளைகளின் தந்தையென்பதோடு குறித்த வர்த்தக நிலையத்தில் பணி புரிந்து வந்த ஊழியராவார்.

வன்முறைச் சம்பவம் திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒன்றென சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும் பொலிசார் இதனை யதார்த்தமாக நடந்த ஒரு சர்ச்சையின் பின்னணியிலான வன்முறையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

No comments:

Post a Comment