கொரோனா பாதிப்பு பற்றிய தகவல்கள் கிராம மட்டத்திலிருந்து ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் நாட்டில் மேலும் பல கிராமங்களை தனிமைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
பாதிப்புள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்துவதன் மூலம் பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மேலதிக பரவலைத் தடுப்பதும் இலகுவாக இருக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல இடங்களில் நகர மற்றும் கிராம மட்டத்திலான தனிமைப்படுத்தல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment