]
பேருந்து டிக்கட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு தினசரி 1 கோடி ரூபா இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கிறார் இ.போ.ச தலைவர் கிங்ஸ்லி ரணவக்க.
பெரும்பாலான மோசடிகளில் நடாத்துனர்களுக்குப் பங்கிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், புதிய பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் நாடளாவிய ரீதியில் திடீர் நடவடிக்கைள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இ.போ.சபைக்குச் சொந்தமான 107 டிப்போக்களிலும் ஏதோ ஒரு வகையில் மோசடி இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment