ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்கு முக்கிய பங்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பற்றி அவர் சார்ந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் கவலையளிப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
சுதந்திரக் கட்சியினர் விரும்பினால் 'நண்பர்களாக' இருக்கலாம் அல்லது வெளியேறலாம் என பெரமுனவினர் தெரிவித்து வரும் நிலையில் அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரமுனவின் சின்னத்தை மாற்றப் போவதில்லையெனவும் பெரமுன ஊடாகவே போட்டியிடப் போவதாகவும் அக்கட்சி சார்பில் வலுவாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் சுதந்திரக் கட்சி தமது பிரச்சார நடவடிக்கைகளின் போது மஹிந்த - கோட்டாவின் உருவப்படங்களை உபயோகிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment