முஸ்லிம் தலைவர்கள் மக்களைக் குழப்பி வைத்துள்ளார்கள்: நிமல் - sonakar.com

Post Top Ad

Tuesday 17 December 2019

முஸ்லிம் தலைவர்கள் மக்களைக் குழப்பி வைத்துள்ளார்கள்: நிமல்


முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பொது மக்களுக்கைத் தவறாக வழி நடாத்திக் குழப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் நிமல் சிறிபால டிசில்வா.


கோட்டாபே ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்படும் என அச்சமூட்டி, மக்களை அவரிடமிருந்து பிரித்து வைத்துள்ள முஸ்லிம் தலைமைகளை இனியும் மக்கள் நம்பக் கூடாது என வெலிமடையில் வைத்து அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது பெருவாரி முஸ்லிம் - தமிழ் சமூக வாக்குகள் கோட்டாபேவுக்கு கிடைக்காது போனதற்கு அதுவே காரணம் எனவும் இனி 'புதிதாக' சிந்தித்து இயங்கக்கூடிய வாய்ப்பு முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் நிமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment