
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக வெளியான தகவலை மறுத்துள்ளார் அமைச்சர் கபீர் ஹாஷிம்.
அப்படி எதுவும் அந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லையென விளக்கமளித்துள்ள அவர் ஞாயிறு தினம் ரணில் - சஜித் இடையேயான சந்திப்பு இடம்பெறவுள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரணில் மற்றும் கரு ஜயசூரியவின் ஆசீர்வாதத்துடனேயே தான் போட்டியிடவுள்ளதாக சஜித் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment