தயாசிறி U-Turn: விசாரணைக்கு ஆஜராக முடிவு - sonakar.com

Post Top Ad

Wednesday 10 July 2019

தயாசிறி U-Turn: விசாரணைக்கு ஆஜராக முடிவு



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் விசாரணை நடாத்தி வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரித்து வந்த தயாசிறி ஜயசேகர இன்று சமூகமளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.



இன்றைய தினம் அவர் சமூகமளிக்கத் தவறின் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற தெரிவுக்குழு எச்சரித்திருந்த நிலையில் தயாசிறி தன் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட டி.ஐ.ஜியும் இன்றைய விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகள் பி.ப 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment