சஹ்ரான் குழு பயன்படுத்திய வாகனம் நிபந்தனையின் பேரில் விடுவிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 3 July 2019

சஹ்ரான் குழு பயன்படுத்திய வாகனம் நிபந்தனையின் பேரில் விடுவிப்பு


பயங்கரவாதி  ஷஹ்ரான் ஹஷிம்  குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக  வான் வண்டி கடும் நிபந்தனையுடன்   பிணையில் விடுவிக்கப்பட்டது.



இன்று புதன்கிழமை (03) திகதி  நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில்   சாய்ந்தமருது பகுதியில் தாக்குதல்  இடம்பெற முன்னர்   தற்கொலை குண்டுத்தாக்குதலில் மரணமடைந்த  ஷஹ்ரான் குழுவினர்  வாடகை  வான் வண்டி ஒன்றின்  மூலம்   மீரி­கம  ஹந்­தா­முல்ல பகு­தி­யி­லுள்ள ஆடை விற்­பனை நிலை­ய­மொன்றில் சிங்­களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களை  கொள்­வ­னவு செய்­தி­ருந்­தனர்.

இவ்வாறு  வாடகை மூலம் பெறப்பட்ட வான் வண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடரபான வழக்கு மன்றில் நீதிவானினால் விசாரணைக்கு எடுத்த கொள்ளப்பட்ட போது கடும் நிபந்தனைகளுடன் ரூபா 50 இலட்சம்  பிணையில் குறித்த வான் வண்டி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது விடுவிக்கப்பட்ட வான் வண்டி  வாடகை அடிப்படையில் பெறப்பட்ட போதிலும் பிணையில் விடுவித்த நீதிவான் உரிமையாளரிடம் வழக்கு தவணை நிறைவுறும் வரை  வாகன ஆவணத்தில்  பெயர் மாற்றம் செய்தல்  விற்பனை செய்தல் கைமாற்றுதல் உருமாற்றுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து  விடுதலை செய்துள்ளார்.

குறித்த வான் வண்டி அம்பாறை விசேட பொலிஸாரினால்  காலை மன்றிற்கு கொண்டு வரப்பட்டதுடன் இவ்வாகனத்தை வாடகை அடிப்படையில் செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இன்று வரை வைக்கப்பட்டுள்ளார்.இச்சாரதி தனது வாகனம் இன்னுமொரு தரப்பிற்காக வாடகைக்கு வழங்கியதாக கூறி  மேற்குறித்த பிணையில் விடுவிக்கப்பட்ட வாகன உரிமையாளரை அணுகி அதிக விலையில்  வாடகை ஒன்று வந்துள்ளதாக கூறி வாகனத்தை கைமாறி எடுத்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட வான் வண்டி உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும் வாகனத்தின் ஆவணங்களில் தனது மனைவியின் பெயரை பதிந்துள்ளமையினால் பிணையில் விடுவிக்கப்பட்ட வான் வண்டியை குறித்த பெண்ணே  நீதிமன்றிற்கு வந்து எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விசாரணை தொடர்பான வழக்கு    எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை அன்று  ஒத்திவைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment