![](https://i.imgur.com/AUftuf9.png?1)
பெலியத்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இரவில் குறித்த வீடருகே மறைந்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பியோடியிருப்பதாகவும் வீட்டு உரிமையாளரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய பரபரப்பு ஓய்ந்துள்ள நிலையில், ஆங்காங்கு பாதாள உலக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment