சந்திரிக்கா 'கட்சியைக்' குழப்புகிறார்: ரவி குற்றச்சாட்டு! - sonakar.com

Post Top Ad

Wednesday 3 July 2019

சந்திரிக்கா 'கட்சியைக்' குழப்புகிறார்: ரவி குற்றச்சாட்டு!


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் - ரவி இடையிலான கருத்து மோதல் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், சந்திரிக்காவே குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் ரவி கருணாநாயக்க.



சஜித் பிரேமதாசவுக்கு மங்கள சமரவீர தனது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், கட்சியின் விதி முறைகள் மற்றும் பாரம்பரியத்தை மீறி இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கும் அவர், இதன் பின்னணியில் சந்திரிக்காவே இருப்பதாக தெரிவிக்கிறார்.

கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் ஒருவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment