கோட்டாபே வெளிநாட்டில் தங்கியிருப்பதற்கான அனுமதி நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 19 June 2019

கோட்டாபே வெளிநாட்டில் தங்கியிருப்பதற்கான அனுமதி நீடிப்பு


சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ள கோட்டாபே ராஜபக்க, அங்கு ஜுலை 24ம் திகதி வரை தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.



இருதய அறுவை சிகிச்சைக்காக அங்கு சென்றதாகக் கருதப்படும் கோட்டாபே ராஜபக்சவுக்கு மேலதிக சிகிச்சை அவசியப்படுவதாக கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் டி.ஏ ராஜபக்ச நூதனசாலை வழக்கு விசாரணை ஜுலை 26ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment