மேல் மாகாண ஆளுனராக முன்னாள் மேயர் முசம்மில் - sonakar.com

Post Top Ad

Tuesday 4 June 2019

மேல் மாகாண ஆளுனராக முன்னாள் மேயர் முசம்மில்


மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் இராஜினாமாவையடுத்து அப்பதவிக்கு முன்னாள் கொழும்பு மேயர் முசம்மில் இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.



மேயர் பதவிக் காலம் முடிந்த பின்னும் மலேசியாவுக்கான தூதராகவும் பின் மத்திய சுற்றுப்புறச்சூழல் அதிகார சபை தலைவராகவும் பதவி வகித்த முசம்மில் தற்போது ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தம் மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் இருப்பின் அதனை விசாரிக்க வழி செய்யும் வகையிலேயே இரு முஸ்லிம் ஆளுனர்களும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment