அக்குரஸ்ஸ துப்பாக்கிச் சூடு: கான்ஸ்டபிள் பலி - sonakar.com

Post Top Ad

Wednesday 22 May 2019

அக்குரஸ்ஸ துப்பாக்கிச் சூடு: கான்ஸ்டபிள் பலி


அக்குரஸ்ஸ, உருமுத்த பகுதியில் கள்ளச்சாராயக் கும்பல் ஒன்றுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 30 வயது பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.



கசுன் சம்பத் எனும் பெயர் கொண்ட கான்ஸ்டபிளே இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதுடன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த தர்மசிறி என அறியப்படும் நபரே சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment