புர்கினா பாசோ தேவாலயத்தில் தாக்குதல்: அறுவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Sunday 12 May 2019

புர்கினா பாசோ தேவாலயத்தில் தாக்குதல்: அறுவர் மரணம்


தமது அமைப்புடன் கை கோர்த்துள்ளதாக, அண்மையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவரால் அறிவிக்கப்பட்ட புர்கினா பாசோ அமைப்பு அங்கு டப்லோ நகரில் தேவாலயம் ஒன்றைத் தாக்கி எரியூட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



தேவாலயத்தின் போதகரும் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஐந்து வாரங்களில் அங்கு மூன்றாவது தேவாலயம் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் தீவிரவாதிகள் அருகிலிருந்த வைத்தியசாலையிலிருந்தும் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment