தொடரும் சஹ்ரான் 'வேட்டை': நேற்றும் ஐவர் கைது! - sonakar.com

Post Top Ad

Friday 24 May 2019

தொடரும் சஹ்ரான் 'வேட்டை': நேற்றும் ஐவர் கைது!


ஈஸ்டர் தாக்குதல்களை முன் நிற்று நடாத்திய தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த ஐவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இதில் ஹொரவபொத்தான பிரதேச செயலகத்தில் பணி புரியும் ஒருவரும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

கெபித்திகொல்லாவ மற்றும் கிவுல்கொட பகுதிகளிலிருந்தே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கையில் இறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment