
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு இந்திய அரசு நீட்டித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதியாக 2014ம் ஆண்டு ஐந்து வருடங்கள் தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஐந்து வருடங்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருவதன் பின்னணியில் இவ்வாறு தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment