ஞானசாரவை மன்னித்து விடுங்கள்: BBS கோரிக்கை! - sonakar.com

Post Top Ad

Friday 12 October 2018

ஞானசாரவை மன்னித்து விடுங்கள்: BBS கோரிக்கை!


பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசார, தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்காக பேசியதில் தவறிருந்தால் அவரை மன்னித்து விடும் படி கோரி ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது அவ்வமைப்பு.



2010ம் ஆண்டு முதல் இனக்குரோதத்தை உருவாக்கு, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டுவதற்காக அயராது உழைத்த ஞானசார, ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றுக்குள் புகுந்து சாட்சியை அச்சுறுத்தியதோடு நீதிமன்றை அவமதித்த ஞானசாரவுக்கு தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment