அதிகார யுத்தம்: கலாவெவ தலைமை யானை கொலை! - sonakar.com

Post Top Ad

Monday 17 September 2018

அதிகார யுத்தம்: கலாவெவ தலைமை யானை கொலை!


கலாவெவ காட்டுக்குள் வாழும் சுமார் 300 யானைகளுக்குத் தலைமை தாங்கி வந்த யானையை பிறிதொரு யானை சண்டையிட்டு வீழ்த்திக் கொன்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.



கடந்த சில நாட்களாகவே இடம்பெற்று வந்த மோதலில் ஈற்றில் தலைமை யானை நேற்று உயிரிழந்துள்ள அதேவேளை காட்டில் வாழும் ஏனைய யானைகள் இறுதி மரியாதை செலுத்தி வருவதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல குழுக்களாக பிரிந்து வாழ்ந்த போதிலும் கொல்லப்பட்ட யானையே காட்டில் நீண்ட காலம் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment