கோத்தாவுக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை: பொன்சேகா! - sonakar.com

Post Top Ad

Sunday 23 September 2018

கோத்தாவுக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை: பொன்சேகா!



கோத்தபாய பொது சேவை ஊழியரோ பொது மக்களுக்கு சேவை செய்பவரோ இல்லையெனும் அடிப்படையில் அவருக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அவசியமில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் பொன்சேகா.



மஹிந்த - கோத்தாவினால் சிறைப்படுத்தப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகா தற்போது அமைச்சராக உள்ள நிலையில் கோத்தா ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், கோத்தாவுக்கு உயிரச்சுறுத்தல் வெளியானதாக தெரிவிக்கப்படும் தகவலின் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment