சம்பள உயர்வு பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: சபாநாயகர் - sonakar.com

Post Top Ad

Friday 3 August 2018

சம்பள உயர்வு பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: சபாநாயகர்


நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு 215 வீத சம்பள உயர்வு வழங்கப்படுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கிறார் சபாநாயகர் கரு ஜயசூரிய.



2006ம் ஆண்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கிணங்க நீதிபதிகளின் சம்பள உயர்வோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் அதேயளவு உயர்த்தப்பட வேண்டியுள்ளதாகவும் எனினும் தற்போது இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனக்கு சம்பள உயர்வு வேண்டாம் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment