இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை: ஞானசார சூளுரை! - sonakar.com

Post Top Ad

Wednesday 8 August 2018

இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை: ஞானசார சூளுரை!


தனக்கெதிராக வழங்கப்பட்டுள்ள ஆறு வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கிறார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாதி ஞானசார.



நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருடங்களில் நிறைவு செய்யும் வகையில் 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை எதிர்த்து ஞானசார தரப்பு மேன்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் அவரைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் முயற்சியும் கைவிடப்படுள்ள நிலையில், மேன்முறையீடு மூலம் தண்டனையைத் தவிக்கலாம் என ஞானசார நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment