கட்டாருக்கான இலங்கைத் தூதர் மீது நடவடிக்கை கோரும் புத்திக! - sonakar.com

Post Top Ad

Wednesday 1 August 2018

கட்டாருக்கான இலங்கைத் தூதர் மீது நடவடிக்கை கோரும் புத்திக!


கட்டாரில் இயங்கும் ஸ்டபர்ட் இலங்கை பாடசாலையினை அங்கு தற்போது தூதராகப் பணியாற்றும் ஏ.எஸ்.பி. லியனகே, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் எதோச்சாதிகாரமாக செயற்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் புத்திக பத்திரன.



பாடசாலை நிர்வாகத்தைக் கைப்பற்றி தனக்கு வேண்டியவர்களை நியமித்துள்ளதன் மூலம் அங்கு அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக புத்திக தெரிவிக்கிறார்.

இதேவேளை, முன்னாள் பொறுப்புதாரி மோசடியில் ஈடுபட்டிருந்ததனால் புதிய தலைவரை நியமித்ததாக அண்மையில் லியனகே விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment