ஞானசாரவுக்கு மேன்முறையீட்டுக்கான அனுமதி மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 31 August 2018

ஞானசாரவுக்கு மேன்முறையீட்டுக்கான அனுமதி மறுப்பு!


தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய அனுமதி கோரி ஞானசார தரப்பினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், உச்ச நீதிமன்றில் விசேட மனுத் தாக்கல் செய்யப்போவதாக ஞானசாரவின் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருடங்களில் நிறைவுறும் வகையில் 19 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் ஞானசார அனுமதிக்கப்பட்டுள்ளமையும் அங்கு சீருடை அணிய மறுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment