
தாய்லாந்து, குகையொன்றுக்குள் சென்று சிக்கிக் கொண்ட உதைபந்தாட்ட அணியொன்றைச் சேர்ந்த அணியைச் சேர்ந்த சிறுவர்களும் பயிற்றுவிப்பாளருமாக அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
12 சிறுவர்களும் பயிற்றுனரும் இவ்வாறு சிக்கிக் கொண்டிருந்த நிலையில் கடினமான மீட்புப் பணிகள் சர்வதேச உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
11 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட குறித்த குழுவினர் குகைப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த நிலையில் அங்கிருந்து வெளியேற முடியாது சிக்கிக் கொண்டிருந்தமையும் உள்ளூர் மற்றும் சர்வதேச சுழியோடும் விற்பன்னர்கள் 56 பேர் அடங்கிய குழு மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment