
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் கோத்தபாய போட்டியிட்டால் தோற்கடிப்பது இலகுவாக அமையும் என தெரிவித்துள்ளார் ராஜித சேனாரத்ன.
மஹிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிட முடியாது என்பதால் பெரும்பாலும் கோத்தபாயவே கூட்டு எதிர்க்கட்சியின் தெரிவாக இருக்கும் என பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையிலேயே ராஜித இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோத்தபாய தலைகீழாக நின்றாலும் சிறுபான்மை மக்களின் வாக்கைப் பெற முடியாது எனவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment