பாதாள உலக கொலைகளை கட்டுப்படுத்தியிருக்கிறோம்: பூஜித - sonakar.com

Post Top Ad

Saturday 7 April 2018

பாதாள உலக கொலைகளை கட்டுப்படுத்தியிருக்கிறோம்: பூஜித


தொடர் கொலைகள் மற்றும் பாதாள உலக கோஷ்டி மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தாகிவிட்டது என்கிறார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.



அங்கொட லொக்கா மற்றும் மதுஷ் ஆகிய பிரபல ரவுடிகளின் சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கும் அவர், கைது செய்யப்பட்டவர்களுள் ரன் கெல்ல என அறியப்படும் பெண்ணொருவரும் உள்ளடக்கம் என தகவல் வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கண்டி வன்முறையின் போதும் பெண்கள் களமிறக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment