210 மில்லியன் ரூபா மோசடி; தகவல் உதவி கோரும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Wednesday 4 April 2018

210 மில்லியன் ரூபா மோசடி; தகவல் உதவி கோரும் பொலிஸ்!



நாவலயைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் 210 மில்லியன் ரூபா மோசடி செய்த நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொது மக்களிடம் தகவல் உதவி கோரியுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.


ராஜகிரியவில் வசித்து வந்த படத்தில் காணப்படும் குறித்த நபரிடம் தான் கொடுத்த ரூ. 210,623,250 பணத்தை திருப்பித் தரவில்லையென நாவல நபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் பொது மக்களிடம் தகவல் உதவி கோரியுள்ளனர்.

விபரமறிந்தவர்கள் 011-239 5248 எனும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ளும்படி பொலிசார் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment