நவமணி ரமழான் பரிசு மழை – 2017; பரிசளிப்பு நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Thursday 19 April 2018

நவமணி ரமழான் பரிசு மழை – 2017; பரிசளிப்பு நிகழ்வு



நவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து 05 ஆவது முறையாக நடாத்தும் ரமழான் பரிசு மழை 2017 இன் பரிசளிப்பு நிகழ்வு இன்று (19) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

கடந்த வருடம் நோன்பு காலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு பதில்களை அனுப்பி வைத்தனர்.

இதில் 1ஆம் பரிசான உம்ரா பொதியை ஹன்தெஸ்ஸ - சனீஹா காசிம் பெற்றுக் கொள்வதோடு, 2ஆம் பரிசான மடிக்கணனியை தர்காநகர் - சாகிரா பாஹிம் மற்றும் 3ஆம் பரிசான  ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியை வெல்லம்பிடிய - எம். எச். ஹாதியும் பெற்றுக் கொள்கின்றனர். 

கட்டுரை எழுதும் போட்டியில் காத்தான்குடி ஏ. எல்.எம். சித்தீக் 1ஆம் பரிசினையும் இஸட். ஏ. ரஹ்மான் 2ஆம் பரிசினையும் ஜே.டி. எஸ். ஜெஸீலா 3ஆம் பரிசினையும் பெறுகின்றனர்.

அத்தோடு, பாலமுனை - எம். எச். சுபைதீன், சாய்ந்தமருது - எம். றிம்ஸாத், சில்மியாபுர - எச். பத்ஹுல்லாஹ், வெலம்பொட  - ஏ. ஏ. நுஃமான், கல்முனைக்குடி  - எஸ். எம். சதீம், இராஜகிரிய - யூ. எல். றிப்கா, காத்தான்குடி - ஐ. ஏ. றஸ்ஸாக், கொச்சிக்கட - ஐ. எம். இர்ஸாத், மருதானை - ரீ. ஆர். டிவாங்ஸோ, கள் - எலிய - பி. எம். லீனா, சம்மாந்துறை - ஆர். எம். தாரிக், நாவலப்பிடிய - எம். பாத்திமா, வெலிகம - எம். எஸ். எம். யுஸ்ரி, கிண்ணியா - ஐ. இல்யாஸீன், ஹொரவப்பொத்தான - எம். கே. பஸீலா, மாவனெல்ல - எம். எஸ். ஸஷா, ஒலுவில் - இஸட். அப்துர்ரஹ்மான், சாய்ந்தமருது - ஏ. அஸ்பா, கொழும்பு - 15 - எம். நஜாத், கண்டி - எம். இஸட். அஸ்லஹ், கொச்சிகட - எம். டி. எம். தன்வீர், கந்தளாய் - ஆர். றஸ்மியா  ஆகிய 22 பேர் ஆறுதல் பரிசினைப் பெற்றுக் கொள்கின்றனர்.      

ஜம்மியதுஷ்- ஷபாப் பிரதிப் பணிப்பாளர் எம். எஸ். எம். தாஸிம் மௌலவியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தபால் துறை அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் பிரதம அதிதியாகவும் தேசிய நல்லிணக்க, ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, அல் - குர்ஆன், சுன்னா கற்கைக்கான இளவரசர் ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் - சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் விசேட அதிதிகள், கல்விமான்கள், உலமாக்கள், வர்த்தகப்பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment