சரணடைந்த BMW உரிமையாளருக்கு விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Tuesday 20 March 2018

சரணடைந்த BMW உரிமையாளருக்கு விளக்கமறியல்!


இரு வாகனங்களுடன் மோதிய பின் தனது சொகுசு காரினை கைவிட்டுச் சென்ற உரிமையாளர் நேற்றைய தினம் பொலிசில் சரணடைந்துள்ள நிலையில் அவருக்கு எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தின் உரிமையாளர் ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேன என வதந்தி பரப்பப்பட்டு வந்த நிலையில் அது தனது உறவுக்காரர் ஆனால் எந்த வகையிலும் தன்னுடைய அரசியலில் தொடர்பற்றவர் என அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்திருந்தார்.



இந்நிலையிலேயே நேற்றைய தினம் தலங்கம பொலிசில் குறித்த நபர் சரணடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment