கடமைகளைப் பொறுப்பேற்றார் ரோசி சேனாநாயக்க - sonakar.com

Post Top Ad

Thursday 22 March 2018

கடமைகளைப் பொறுப்பேற்றார் ரோசி சேனாநாயக்க


கொழும்பின் முதலாவது பெண் மேயராகத் தெரிவாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு வழி செய்யும் வகையில் நேற்று முன் தினம் ஐக்கிய தேசியக் கட்சியூடாக மாநகர சபைக்குத் தெரிவாகியிருந்தோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதோடு உதவி மேயராக முஹம்மத் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.


நாளை கன்னியமர்வு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நேரடியாக கூட்டத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment